தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடந்த மாதங்களை விட ஸ்பேம் அழைப்புகள் தேசிய அளவில் குறைவு; டிராய் அறிவிப்பு..

கடந்த மாதங்களை விட ஸ்பேம் அழைப்புகள் தேசிய அளவில் குறைவு; டிராய் அறிவிப்பு..

Spam Calls Reduced this MOnth  Advertisement

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், ஸ்பேம் தொடர்பான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவவை, அக்டோபர் மாதத்தில் 1.51 இலட்சம் அளவில் குறைந்துவிட்டதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற விஷயங்களை கட்டுப்படுத்தி வரும் டிராய், இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 1.63 இலட்சம் ஸ்பேம் சார்ந்த அழைப்புகள் பெறப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் அவை 20 விழுக்காடு என்ற அளவில் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து அதன் வீழ்ச்சி தொடங்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: ரூ.1 கோடி லோனை ஒரே மாதத்தில் செலுத்திய வாடிக்கையாளர்; வாயைப்பிளந்த வங்கி மேலாளர்.. எப்படி சாத்தியம்? 

Spam Calls

டிராய் அறிவிப்பு

வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் போன்றவை மூலமாக மோசடி செயல்கள் நடைபெறும் நிலையில், அதனை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்த காரணமாக அமைந்து இருக்கிறது என டிராய் தெரிவித்துள்ளது. 

செல்போன் நிறுவனங்கள் வாயிலாக சமீபத்தில் ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் வாயிலாக ஸ்பேம் அழைப்புகள் தொடர்பாக மக்களும் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். ஸ்பேம் என கவனிக்கப்படும் செல்போன் நம்பர்கள் நேரடியாக பிளாக் செய்யப்பட்டு அழைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: உதயமானது "டெக் சூப்பர் ஸ்டார்"  யூடியூப் சேனல் - புது ஆபிஸ் ஓபன் பண்ணியாச்சே.. இனி எல்லாம் மாஸ் தான்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spam Calls #Technology #Forgery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story