தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து வந்து சரணடைந்த குற்றவாளி..! என்ன காரணம்.?

நியூசிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் பிரையன்ட் என்பவ

young man arrived in a helicopter and surrendered to the police Advertisement

நியூசிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் பிரையன்ட் என்பவர், அவருடன் அறையில் தங்கியிருக்கும் நபர்களுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருப்பவர்களை ஜேம்ஸ் பிரையன்ட் கத்தியால் குத்தியதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஜேம்ஸ் பிரையன்ட் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்த நாட்டு போலீசார் அவரை தேடிவந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஜேம்ஸ் பிரையன்ட் தப்பி ஓடி தலைமறைவானார். அவர் கடந்த 5 வாரங்களாக வயனகருவா என்ற நகரில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்துள்ளார்.

helicopter

இந்நிலையில், ஜேம்ஸ் பிரையண்ட் ஆபத்தான நபர் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, உள்ளூர் தொலைக்காட்சியிலும் தேடப்படும் நபராக அவர் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, ஜேம்ஸ் சரணடைய முடிவு செய்து, வழக்கறிஞரின் உதவியுடன் அமைதியான முறையில் சரணடைய முடிவு செய்துள்ளார். அவர் தங்கியிருந்த வனப்பகுதியில் இருந்து காவல் நிலையத்திற்கு செல்ல சொந்த செலவில் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து காவல் நிலையத்திற்கு சென்றார். இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#helicopter #surrendered
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story