அஜித், விஜய்க்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது!" இயக்குனர் அட்லீ ஓபன் டாக்!



Director Atlee openup about his struggles in cinema

இயக்குனர் ஷங்கரிடம் நண்பன், எந்திரன் ஆகிய படஙக்ளில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் 2013ம் ஆண்டு "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவதாக விஜயை வைத்து "தெறி" படத்தை இயக்கியிருந்தார். 

atlee

தொடர்ந்து விஜயை வைத்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ள அட்லீ, சமீபத்தில் ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை இயக்கியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அட்லீ இயக்கிய அனைத்துப் படங்களுமே ஒரிஜினல் படம் இல்லை என்றும், ஒரு பழைய படத்தின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.

ராஜா ராணி படம் மணிரத்னம் இயக்கிய "மௌன ராகம்" படத்தின் மாடர்ன் வெர்ஷன் என்றும், தெறி பாட்ஷா படம் போன்றும், சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் அந்நியன், ஒரு கைதியின் டைரி, ரமணா உள்ளிட்ட படங்களை போன்று இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

atlee

சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய அட்லீ, " எனக்கு ஒரு படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் நான் ஒரு படத்தை எடுக்கலாம். அது தவறில்லை. என்னை வீழ்த்த வேண்டும் என்று கூட்டமே இருக்கிறது. அஜித், விஜய்க்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. போராடி ஜெயிக்க வேண்டும்" என்று அட்லீ கூறியுள்ளார்.