இந்தியா வென்றால் நிர்வானமாக ஓடுவேன்னு சொன்ன நடிகை.. இப்ப என்ன சொல்லிருக்காங்க பாருங்க.!



if-the-indian-team-wins-rekhabhoj-will-be-the-new-inter

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையான ரேகா போஜ் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால், விசாகப்பட்டினம் கடற்கரையில்  நிர்வாணமாக ஓடுவேன் என கூறி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினார்.

Rekha Boj

அவருடைய இந்த செயல் சமூக வலைதள வாசிகளிடையே கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இப்படி செய்வது அநாகரிகமான செயல் என்று கருதப்படாது. மாறாக ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால், இது போன்ற செயலில் ஈடுபடுவார்கள். இந்த கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளின் பின்பற்றப்படும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.

ஆனால் இந்திய நாட்டை பொறுத்தவரையில் இப்படி போன்ற ஒரு செயலை செய்தால் அது நிச்சயமாக மற்றவர்களை அவமானப்படுத்தும் ஒரு செயலாக தான் கருதப்படும். ஆகவே சமூக வலைதளவாசிகள் அந்த நடிகைக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், தான் நடிகை ரேகாபோஜ் இது குறித்து ஒரு புதிய விளக்கத்தை வழங்கியுள்ளார்.

Rekha Boj

அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெரிவித்த அவர், தற்போது அவர் தெரிவித்திருப்பதாவது, மகிழ்ச்சியாக இருக்கும்போது வெளிநாட்டு ரசிகர்கள் ஆடைகளை களைந்து விட்டு கடற்கரையில் ஓடுவார்கள்.

 இந்திய அணி வெற்றி பெற்றால், நானும் அதையே செய்வேன். ஆனாலும், அனைவரின் முன்போ அல்லது கேமராவின் முன்போ செய்வேன் என்று நான் சொல்லவில்லை. இந்திய கலாச்சாரத்தின்படி பட்டுப்புடவை கட்டிக் கொண்டு, கையில் கொடியுடன் ஓடுவேன் என்று அவர் ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.