ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!



  Singer Suchitra about Vairamuthu on Pantene Shampoo

தமிழ் திரையுலகில் பாடலாசிரியர், கவிஞர் என முந்தைய தலைமுறை & இன்றைய தலைமுறையால் பெருவாரியாக போற்றப்பட்டவர் கவிஞர் வைரமுத்து. இவரின் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னர், கவிஞர் வைரமுத்துவை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். 

சின்மயி புகார்

அவரின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாடகி சின்மயி தொடர்ந்து தனது குரலை கொடுத்து வரும் நிலையில், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வைரமுத்து தரப்பிலும் அவருக்கு எதிரான குற்றசாட்டுகள் மறுக்கப்படுகிறது. அந்த விஷயம் குறித்து மௌனம் காக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: #Breaking: பிரபல நடிகையின் தந்தை தற்கொலை; மாடியில் இருந்து குதித்து சோகம்.!!

அடுத்த புயல்

இதனிடையே, சமீபத்தில் நடிகர் தனுஷ் விவகாரத்தில் புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா, தொடர்ந்து ஒருசில சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து குறித்து அவர் தெரிவித்த தகவல், அடுத்த புயலை உருவாக்கி இருக்கிறது. 

வைரமுத்துவும், சாம்பு பரிசும்

அதாவது, வைரமுத்து சுசித்ராவை வீட்டிற்கு பரிசு கொடுப்பதாக அழைத்து இருக்கிறார். அதனை ஏற்று பாட்டியுடன் வீட்டிற்கு சென்ற சுசித்ராவுக்கு, பேன்டீன் ஷாம்பு & கண்டிஷனர் கொடுத்து இருக்கிறார். அவர் வேறொரு நோக்கத்துடன் என்னை வீட்டிற்கு அழைத்த நிலையில், பாட்டி என்னுடன் வந்து, வைரமுத்துவை திட்டி தீர்த்த காரணத்தால் பரிசாக ஷாம்புவை வழங்கி சமாளித்து அனுப்பினார் என கூறியுள்ளார். இதனால் பேன்டீன் ஷாம்புவையும், வைரமுத்துவையும் தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

இதையும் படிங்க: 27 ஆண்டுகள் கழித்து அசத்தல்.. மலேசியா வாசுதேவனின் குரலில் வேட்டையன் பட பாடல்.!