கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!



a mother of three in Uttar Pradesh left her husband for Her Boyfriend Now Reunion with Family 

 

திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள், பல்வேறு காரணங்களால் வேறொரு நபருடன் காதல் பயப்படுகின்றனர். ஆண் - பெண் என இருபாலரும், திருமணத்தை மீறிய கள்ளக்காதல் உறவில் ஈடுபடுவது, அதனால் ஏற்படும் இழப்புகள், கொலைகள் போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. 

தனிப்பட்ட காரணத்திற்காக இருவரின் சூழ்நிலையால் அவர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் செயல்பட்டாலும், கணவன் - மனைவியின் அன்புக்கு அடையாளமாக பிறந்த குழந்தைகளும் இவ்வாறான சூழ்நிலை மிகவும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு கணவனை பலிகொடுத்த மனைவி; உறுதுணையாக மகன்கள்.. 30 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான உண்மை.!

Affair

3 குழந்தைகளின் தாய்

எனினும், சில நேரங்களில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஈடுபடும் தம்பதிகள், உண்மையை உணர்ந்து மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்வும் நடக்கின்றன. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. 

இதில் மனைவி வேறொரு நபருடன் காதல் வயப்பட்டு தனது குழந்தைகள், கணவரை தவிக்கவிட்டு கள்ளகாதலருடன் ஓட்டம் பிடித்தார். இதனிடையே, சில மாதங்கள் கள்ளக்காதலியுடன் இருந்த நபர், அவரை கைவிட்டுச் சென்றார். இதனால் கணவரை தொடர்புகொண்ட பெண்மணி விபரத்தை கூறியுள்ளார். 

மனைவியை ஏற்றுக்கொண்டார்

தனது மனைவியின் மீது பேரன்பு கொண்ட கணவர், தனது மனைவியின் செயலை மன்னித்து, அவரை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவருடன் வாழ்க்கையை தொடங்குவதாக தெரிவித்துள்ளார். கணவன் - மனைவியாக தேம்பித்தேம்பி அழுத நிலையில், இதுகுறித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 

அவை உத்திரபிரதேசத்தில் நடைபெற்றது? என்ன நடந்தது? என விசாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கடவுள் இருக்கான் குமாரு.. இடித்து விழுந்த 160 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. நொடியில் உயிர் தப்பிய சிறார்கள்.!