தந்தை உயிரிழந்ததால் 10 வயதில் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்ட சிறுவன்; உதவ முன்வந்த ஆனந்த் மகேந்திரா.!



delhi-tilak-nagar-boy-jaspreeth-get-help-from-anand-mah

 

டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத். சிறுவனின் தந்தை மூளை கட்டியால் சமீபத்தில் உயிரிழந்தார்.

சிற்றுண்டி கடை நடத்தும் சிறுவன்: 

இதனால் தனது தந்தையின் தொழிலாளான, தெருவோரம் முட்டை மற்றும் சப்பாத்தி போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் சிற்றுண்டி கடையை வைத்து நடத்தி வருகிறார். 

ஆனந்த் மகேந்திரா உதவுவதாக உறுதி: 

சிறுவனுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அவரை பராமரிக்க வேண்டிய கடமை உள்ளது. இதனால் சிறுவன் குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலானது. 

இந்நிலையில், விடியோவை கண்ட ஆனந்த் மகேந்திரா, தனது பவுண்டேசன் உதவியுடன் சிறுவனின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவித்துள்ளார்.