ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
கள்ளக்காதலி கொடூர கொலை; குடிபோதையில் நடந்த தகராறில் பயங்கரம்.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம், மாமலைக்கண்டம், எளம்பளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் மாயா (வயது 37). இவர் ஆதிவாசி சமூக பெண் ஆவார். திருமணம் முடிந்து, குடும்ப பிரச்சனையால் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்மணி, கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு மலையாற்றூர் பகுதியில் வசித்து வந்த ஜோன்சன் (33) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இருவரிடம் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. ஏற்கனவே திருமணம் முடிந்த இருவரும், மனைவி - குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நபர்கள் ஆவார்கள்.
நேற்று இருவரும் போதையில் இருந்தபோது தகராறு ஏற்பட்டு, கைகலப்பு உண்டாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜோன்சன், மாயாவை சரமாரியாக தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பயணிகளை ஏற்றுவதில் தகராறு.. ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை.. பேருந்து ஊழியர்கள் வெறிச்செயல்.!
மேலும், ஜோன்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: 42 வயது நபருடன் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுமி.. மர்மம் விலகாமல் விழிபிதுங்கும் காவல்துறை.! பெற்றோர் கண்ணீர்.!