இளைஞர்களின் கையில் திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்; பகீர் சம்பவம்.!



Smartphone Blast in Haveri Karnataka 

 

ஸ்மார்ட்போன்கள் இன்றளவில் மனிதர்களின் இன்றியமையாத பொருட்களில் ஒன்றாகிவிட்ட நிலையில், அவ்வப்போது அவை வெடித்து சிதறும் பயங்கரமும் நடக்கிறது. இந்நிலையில், நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம், ஹோஸ்ரிட்டி கிராமத்தில் காயத்ரி செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. 

பழுது நீக்கும்போது சம்பவம்

இந்த கடைக்கு முன்பு இளைஞர்க இருவர் நின்றுகொண்டு இருந்த நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. ஸ்மார்ட்போன் பழுது சரி செய்யப்பட்டுக்கொண்டு இருந்த சமயத்தில், அதனை சோதிக்க கையில் வாங்கியபோது வெடித்து சிதறியது தெரியவந்தது. 

இதையும் படிங்க: அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய காதல் ஜோடி.. பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தும் நேர்ந்த துயரம்.!

இவ்விபத்தில் இளைஞரின் முகம் கருகியது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: 3 வயது சிறுவனை சீரழித்த 55 வயது ஆசிரியை; நர்சரி பள்ளியில் நடந்த பகீர் செயல்.!