7 வயது சிறுமியை சீரழித்த பூசாரி; அடித்துநொறுக்கிய பொதுமக்கள்.!



 Uttar Pradesh Hapur District Preist Raped Young Girl 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காபூர் மாவட்டம், லாஜிபுரி, நாகர் கோட்வாலி பகுதியில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், கோவில் பூசாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

பூசாரிக்கு அடி உதை

கடந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின்போது இத்துயரம் நடந்ததாக தெரியவருகிறது. இந்த உண்மை சமீபத்தில் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் கோவிலுக்கு சென்று அதனை சூறையாட முற்பட்டனர். கோவில் பூசாரி தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்; 5 வயது சிறுமி பலாத்காரம்..!

ஆத்திரமடைந்த மக்கள் கோவில் பூசாரியை அடித்து நொறுக்கிவிட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பூசாரியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க: கலியுகத்தில் எத்தனை கொடுமை?.. 6 வயது சிறுமி, ஆடு பலாத்காரம்.. கிழட்டு காமுகன் அட்டூழியம்..!