YSR காங்கிரஸ்க்கு டாட்டா காட்டிய மக்கள்?.. ஆந்திராவில் வருகிறது ஆட்சி மாற்றம்?.!



People's pulse exit poll out now

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. 2024 மக்களவை பொதுத்தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. 

ஆட்சி மாற்றம் உறுதி?

ஜூன் ஒன்றாம் தேதியான இன்று ஏழு கட்ட தேர்தல்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாலை 7 மணியளவில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

politics

செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு

People's pulse எனப்படும் செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணியானது 95 முதல் 110 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அணி 45 முதல் 60 தொகுதிகளை வெல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.