காதலின்போதே நெருக்கம்.. வீடியோ எடுத்து ரூ.20 இலட்சம் கேட்டு மிரட்டிய காதலன்.. நிச்சயமானபின் கொடுமை.!



Chennai Pallavaram Girl Cheated by Love Boy 

 

தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் நபரை நம்பி திருமணத்திற்கு முடிவெடுத்த இளம்பெண்ணுக்கு காதலன் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

சென்னையில் உள்ள பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண், தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் சதிஷ் குமார் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி இருக்கிறது. 

இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி உல்லாசம்.!! கட்டாய கருக்கலைப்பு.!! தனியார் நிறுவன ஊழியர் கைது.!!

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கல்லூரியில் படித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சதிஷ் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு இருவருக்கும் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. 

chennai

காதலிக்கு மிரட்டல்

இந்நிலையில், நிச்சயம் முடிந்த 3 மாதத்திற்கு பின்னர், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிய சதீஷ், தன்னுடன் வங்கியில் பணியாற்றி வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மேற்கூறிய பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

தனிமை வீடியோ

அதுமட்டுமல்லாது, திருமணத்திற்கு முன்பே காதலின்போது ஜோடி தனிமையில் சந்தித்துக்கொண்ட நிலையில், அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்த காதலன் சதிஷ், விடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.20 இலட்சம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட பெண் தாம்பரம் மாநகர காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் நட்பு.!! மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பலாத்காரம்.!!