சென்னை: தாய்-மகளை முட்டிதூக்கிய பசு.. பதறவைக்கும் காட்சிகள்.. குழந்தையை காக்க போராடிய தாய்.!



in Chennai Kolathur a Cow Attacks Mother and Daughter 

சாலையோரம் நடந்து சென்ற தாய் - மகளை மாடு தாக்கிய காணொளி வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள கொளத்தூர், பாலாஜி நகர் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிக்கு சிறுவயது மகள் இருக்கிறார். நேற்று (14 மார்ச் 2025) காலை நேரத்தில், சுமார் 7 மணியளவில், பெண்மணி தனது மகளுடன் வீதியில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 

அப்போது, சாலையோரம் பசுமாடு ஒன்று இருந்த நிலையில், அதனை கவனித்த பெண்மணி, மாடு முட்ட வருவதுபோல இருந்ததால், மகளை கையில் பிடித்தவாறு எதிர்திசைக்கு சென்றார். ஆனால், தாய்-மகளை நோட்டமிட்ட மாடு, இருவரையும் தாக்கியது.

இதையும் படிங்க: மருமகளிடம் பாலியல் அத்துமீறல்.. மாமியாருடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய கண்ணகி.!

தாக்கி விரட்டி அடிப்பு

தாய் தனது மகளை காப்பாற்ற, பத்திரமாக அவரை மறைத்து வைத்துக்கொண்டார். இதனால் மாடு தாயை தாக்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தாய் - மகளை தாக்கிய பசுமாடை கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கி விரட்டி அடித்தனர்.

பின் இந்த விஷயம் குறித்து மண்டலம் 7 மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பசு மாடை பிடித்தனர். அதன் உரிமையாளர் யார்? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

வீடியோ நன்றிநியூஸ்18 தொலைக்காட்சி

இதையும் படிங்க: ரவுடி ராஜாவை சுற்றிவளைத்து கொடூர கொலை செய்த கும்பல்; சென்னையில் பரபரப்பு.!