கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பரிதாப பலி.!



in Cuddalore Two Wheeler Car Crash 1 Died 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், மாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வகுமார். ரெட்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில், விருத்தாச்சலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தனர். 

கார்-டூவீலர் மோதி விபத்து

அச்சமயம், எதிர்திசையில் வந்த கார் - இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் செல்வகுமார் நிகழ்விடத்திலேயே வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியாகினர். 

இதையும் படிங்க: வறுமையில் படித்து முன்னேறிய காவலருக்கு இப்படியா நடக்கணும்? தஞ்சாவூரில் நடந்த சோகம்.!

ராதா படுகாயமடைந்த நிலையில், உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதையும் படிங்க: மாணவிக்கு முத்தம் கொடுத்த எச்.எம்; உள்ளாடையுடன் ஊர்வலம் நடத்திய உறவினர்கள்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்.!