தனியார் பேருந்து - கார் மோதி பயங்கர விபத்து; தந்தை - 10 வயது மகன் பரிதாப பலி; பெண் படுகாயம்.!



Karur Private Bus Car Collison 2 Died 1 Injured 

 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி, தங்களின் மகனுடன் கோவை நோக்கி பயணம் செய்துள்ளனர். இவர்களின் கார் க. பரமத்தி பகுதியில் வந்துள்ளது. 

அப்போது, கார் தனியார் பேருந்து மீது மோதி எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகவே, காரில் பயணம் செய்த ராம்குமார் மற்றும் அவரின் பத்து வயது சிறுவன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

Karur

காரில் பயணம் செய்த மோகனா படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து க. பரமத்தி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.