#Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!

கடந்த ஜூன் மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து, ஜூன் 14ல் அவரை அமலாக்கத்துறை கைது செய்ய நடவடிக்கை எடுத்து.
திடீரென அவர் மயக்கம் ஏற்பட்டு நெஞ்சு வலியால் அவதிப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு பின் ஜூன் 29 அன்று கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கைக்கு பின்னர் தற்போது புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்று அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 14ல் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சில நாட்களில் அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.