செம மாஸ்.! கெத்து காட்டும் தமிழக முதல்வர்.! உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.! பாராட்டும் பொதுமக்கள்.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், பயணம் செய்ய முடியாமல் உணவில்லாமலும், குடிநீர் இல்லாமலும் நீண்ட நேரமாகத் தவித்து வருகின்றனர் என்ற செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பயணிகளின் குறைகளைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கண்ணப்பர் திடல் சமூகநலம் கூடத்திற்கு அமைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், அப்பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரயில் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசு ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பயணியர்களின் வசதிக்காக உதவி மேசை(Help Desk) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து, தாங்கள் பயணம் செய்வதற்கு உரிய ஏற்பாடு செய்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.