#Breaking: "நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" - முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி.!



mk-stalin-statement-on-neet-exam-7-june-2024

 

2024 நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்த சர்ச்சை வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வு விவகாரத்தில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 

இதனிடையே, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இதையும் படிங்க: #Breaking: "நீட் தேர்வை ரத்து செய்க" புதிய அரசுக்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கோரிக்கை.!

நீட் தேர்வு குளறுபடிகள்

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!" என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்ற தாய்க்கு நேர்ந்த கொடூரம்; இப்படியா மரணம் வரணும்?.!