இதுதான் தமிழ்நாடு!! இந்துக்களை நெகிழச்செய்த இஸ்லாமியர்கள்!! வைரல் வீடியோ..



Muslims helps hindus near Karaikudi viral video

உச்சி வெயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்துச்சென்றபோது தண்ணீர் ஊற்றி சாலையை குளிர செய்த இஸ்லாமியர்களின் செயல் மனதை நெகிழச்செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் திருவிழா முடிந்து 1 வாரம் கழித்து பால்குடம் எடுத்துச்சென்று தங்கள் விரதத்தை முடிப்பது வழக்கம்.

அந்தவகையில் பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் பால்குடம் சுமந்து சாலையில் செல்வதை பார்த்த அந்த பகுதி இஸ்லாமியர்கள், சாலை முழுவதும் தண்ணீரை ஊற்றி சாலையை குளிரச்செய்துள்ளனர். குறிப்பிட்ட இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.