பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
கலவர பூமியாகும் தமிழ்நாடு - அன்புமணி உச்சகட்ட எச்சரிக்கை.. அரசுக்கு எதிராக போர்க்கொடி.!

சென்னையில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காத பட்சத்தில், தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 % இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், திமுக அரசின் செயல்பாடு காரணமாக, தமிழ்நாடு 69 % இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்றம் எதிர்ப்பாக தீர்ப்பு வழங்கினால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும்.
இதையும் படிங்க: #Breaking: பெட்ரோல் குண்டு வீசி 21 வயது இளைஞர் கொலை.. அன்புமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி.!
திமுக தரப்பு தற்போது செய்து வருவது பிற்காலத்தில் பிரச்னைக்கே வழிவகை செய்யும். தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் 50% க்கு மேல் மாநில இடஒதுக்கீடு பகிர்வு இருக்கக்கூடாது என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 69% மாநில இடஒதுக்கீடு இருக்கிறது.
நீதிமன்றத்தில் என்னதான் சட்டப்போராட்டம் நடத்தினாலும், சாதிவாரிகணக்கெடுப்பு இல்லாத பட்சத்தில், 69 % இடஒதுக்கீடை உயர்த்தியது குறித்த விஷயம் கேள்விக்குறியாகும். உச்சநீதிமன்றத்திற்கு தரவுகள் தேவை.
ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு ஏதேனும் கிடைக்கப்பெற்றால், தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும். திமுகவின் ஆட்சி அகன்றுபோகும். அதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி., 3 மாணவிகள் காயம்.!