ரூ.5 இலட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்; குவியும் பாராட்டுக்கள்.!



sanitary worker hand over Chennai Virugambakkam diamond Necklace  

 

சென்னை விருகம்பாக்கம், பி.வி ராஜமன்னார் கோவில் சாலை, வின்சர் பார்க் பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ். சம்பவத்தன்று இவரின் வீட்டில் வைர நெக்லஸ் ஒன்று மாயமானது. அதிர்ந்துபோன தேவராஜ், நெக்லஸை வீடு முழுவதும் அதனை தேடிப்பார்த்து இருக்கிறார். 

தூய்மை பணியாளரின் நெகிழ்ச்சி செயல்

ரூ.5 இலட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் வீட்டில் தேடி கிடைக்காத காரணத்தால், நெக்லஸ் கீழே விழுந்து குப்பையுடன் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குப்பை தொட்டிகளில் தேட முடிவெடுத்தனர், தூய்மை நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மனைவி விபச்சார வழக்கில் கைது.!! கணவரின் ஆத்திரத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.!!

நேற்று தூய்மை பணியாளர் அந்தோணிசாமி என்பவர் குப்பையில் கிடந்த நெக்லஸை தேடி இருக்கிறார். அவரின் கைகளில் வைர நெக்லஸ் கிடைக்கவே, அதனை தேவராஜிடம் அவரை ஒப்படைத்தார். தூய்மை பணியாளர் அந்தோணி சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: கொடூரம்... செல்போனில் பேச மறுத்ததால் ஆத்திரம்.!! இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை.!!