×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமந்தா இதனால் தான் ஜீவனாம்சம் வாங்கலையாம்.. அவரே பகிர்ந்த தகவல்.!

சமந்தா இதனால் தான் ஜீவனாம்சம் வாங்கலையாம்.. அவரே பகிர்ந்த தகவல்.!

Advertisement

சமந்தா திருமணம்  

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. 2017ல் தனது காதலரான நாக சைதன்யாவை இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகள் இருவரும் 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 2021 இல் விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் அறிவித்தனர்.

ஜீவனாம்சம் வேண்டாம்

இது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், இருவரும் விவாகரத்து செய்து கொண்டு தங்களது சினிமாத் தொழிலில் மும்முரமாக ஆரம்பித்தனர். விவாகரத்து நேரத்தில் சமந்தாவிற்கு ஜீவனாம்ச தொகையாக நாக சைதன்யா குடும்பம் ரூ.250 கோடி கொடுக்க முன் வந்ததாகவும், அதை சமந்தா மறுத்துதாகவும் தகவல் வெளியானது.

இதையும் படிங்க: பட வாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரி போட்டோஷூட் செய்யும் மடோனா.. வைரலாகும் வீடியோ.!?

சமந்தா நக்கல்

இது பற்றி சமந்தா, இந்த தகவலை கேட்டு வருத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஒருவேளை வருமான வரித்துறையினர் என்னிடம் வந்தால், என்னிடம் எதுவுமே இல்லை என்று காட்டுவதற்காக தான் அந்த தொகையை வேண்டாம் என்று கூறினேன்." என்று வேடிக்கையாக பேசி இருந்தார். இந்த பேட்டி இப்போது வைரலாக தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: இந்த குட்டி குழந்தை முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரபல நடிகை தெரியுமா.!?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samandha #samandha nagachaithanya #Kollywood #samandha divorce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story