×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம்; 17 வயது சிறுவன் போதையில் நடத்திய பயங்கரம்..!

5 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம்; 17 வயது சிறுவன் போதையில் நடத்திய பயங்கரம்..!

Advertisement

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில், சம்பவத்தன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட 17 வயது சிறுவன் மதுபோதையில், 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பின் சிறுமி மயங்கியதும், அவரை அங்குள்ள புதர் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். ரத்த கரையுடன் சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். 

இதையும் படிங்க: 5 வயது சிறுமி பலாத்காரம்.. 16 வயது சிறுவன் மதுபோதையில் அதிர்ச்சி செயல்..!

சிறுமிக்கு 28 தையல்

சிறுமிக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை முதல்வர் கூறுகையில், "5 வயது சிறுமி மோசமான தருணத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பிறப்புறுப்பில் பலத்த காயம் இருக்கிறது. தாடை, தலை பகுதியிலும் காயம் இருக்கின்றன. 

மொத்தமாக சிறுமியின் பிறப்புறுப்பு சேர்த்து 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. குற்றவாளி சிறுமியை கற்பனை செய்ய இயலாத அளவு கொடூரத்தனமாக கையாண்டு இருக்கிறார். இறைவனின் அருள், உடனடியாக அவரை கொண்டு வந்த உறவினர்களின் சாதுர்யத்தால், இன்று அவரின் உயிர் தப்பித்தது" என கூறினார். 

சிறுமி பலாத்காரம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 17 வயது சிறுவனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நொடியில் களையிழந்த திருமண வைபோவம்.. மயங்கி சரிந்த மணமகனால் குடும்பத்தினர், உறவினர்கள் பரிதவிப்பு.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #sexual abuse #Child rape #மத்திய பிரதேசம் #பாலியல் பலாத்காரம் #சிறுமி பலாத்காரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story