×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!

பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!

Advertisement

ஐவர் கும்பலால் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் 12 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர், மகளை கண்டித்த காரணத்தால், அவர் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக ஜோகேஸ்வரி இரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார்.

அச்சமயம், சிறுமி தனியாக வருவதை தெரிந்துகொண்ட நபர், பேச்சுக்கொடுத்து தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு 4 பேர் இருந்த நிலையில், மொத்தமாக 5 பேர் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதையும் படிங்க: நண்பரின் காதை மென்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்.! இதுதான் காரணமா.?! 

கூட்டுப்பாலியல் வன்கொடுமை

பின் சிறுமியை தங்களின் வாகனத்தில் அழைத்து வந்த தாதர் இரயில் நிலையத்தில் விட்டு தப்பிச்சென்றனர். வீட்டுக்கு வழி தெரியாமல், கயவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புடன் சிறுமி அழுதுகொண்டு, அங்கும் - இங்கும் சுற்றித்திரிந்தார்.

இதனை கவனித்த இரயில்வே காவல்துறையினர் சிறுமியிடம் விசாரித்தபோது, ஐவர் கும்பலின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், அவர் கொடுத்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஐவர் கும்பலை தேடி வந்தனர், 

சிறுமி கொடுத்த அடையாளத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: சண்டையில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய நட்பு.. வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumbai #sexual abuse #maharashtra #gang rape #கூட்டுப்பாலியல் பலாத்காரம் #மும்பை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story