ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!
ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், பத்லாபூர் பகுதியில், கட்டுமான தொழிலாளியின் குடும்பம் வசித்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களான இவர்கள், கட்டிடத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
சிறுமி மரணம்
இதனிடையே, தம்பதிகளின் 4 வயதுடைய மகள் அக்ஷிதா, கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றபோது சோகம்; உடல் கருகி புதுமாப்பிள்ளை பலி.!
பால்கனிக்கு அனுப்பாதீங்க
அங்கு சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுவர்களை பால்கனி பகுதிக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: மரக்கட்டையை இறக்கும்போது சோகம்; உடல் நசுங்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி.!