"புல்லா குடி, ஆக்சிலேட்டரை இறுக்கி பிடி" - 100ல் போனதால் 23 வயதிலேயே 108 வந்தும் பறிபோன உயிர்.!
புல்லா குடி, ஆக்சிலேட்டரை இறுக்கி பிடி - 100ல் போனதால் 23 வயதிலேயே 108 வந்தும் பறிபோன உயிர்.!
போதையில் வாகனம் இயக்கிய இளைஞர் விபத்தில் சிக்கி மரணித்தார். அவரின் நண்பர் உயிர் ஊசலாடுகிறது.
சென்னையில் உள்ள ஆவடி, காமராஜர் நகர், 6 வது தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 23). இவர் மதுபணம் அருந்தும் பழக்கம் கொண்டவர் ஆவார்.
நேற்று முன்தினம் இரவில், மதுபானம் அருந்திய மணிகண்டன், தனது யமஹா எம்.டி இருசக்கர வாகனத்தில் பயணித்தார். இவருடன், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த, மணிகண்டநின்னன்பர் தீனதயாளனும் (வயது 22) இருந்தார்.
இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இருவரும் இருசக்கர வாகனத்தில் கொள்ளுமேடு, சரஸ்வதி நகர் பகுதியில் அதிவேகத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்தது.
விபத்தில் சிக்கி பலி
அப்போது, சாலையோரம் இருந்த கால்வாயில் இருவரும் விழுந்த நிலையில், படுகாயமடைந்த மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீனதயாளன் தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதையின் பாதை கேடு தரும்..
இதையும் படிங்க: துப்புரவு பணியாளரின் நேர்மை.. நகையை ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!