#Breaking: 17 வயது சிறுவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு.! காவல்துறை குவிப்பு.!
#Breaking: 17 வயது சிறுவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு.! காவல்துறை குவிப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், அரியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுவன் தேவேந்திரன் (வயது 17). சிறுவன் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் கபடி விளையாடியும் வருகிறார். இதனிடையே, இன்று சிறுவன் வழக்கம்போல, தனியார் பேருந்து ஒன்றில் ஏறி திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அரியாயகிபுரத்தை அடுத்த கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் பேருந்து 3 பேர் கும்பலால் இடைமறிக்கப்பட்டது.
பேருந்துக்குள் ஏறிய கும்பல் சிறுவனை பேருந்தில் இருந்து கீழே தள்ளி, அவரை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் சிறுவனின் முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் கும்பலை தடுக்க முற்பட்டதால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையும் படிங்க: பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!
சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் மீது கபடி விளையாட்டில் ஏற்பட்ட விரோதம் தொடர்பாக கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது உறுதியானது. தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியை பதறவைத்த தாய்-மகள் கொலை விவகாரம்.. குற்றவாளி சுட்டுப்பிடிப்பு.!