மூதாட்டியை ஆவேசமாக தள்ளிவிட்ட காவலர்.. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!
மூதாட்டியை ஆவேசமாக தள்ளிவிட்ட காவலர்.. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில், அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் எப்போதும் பரபரப்புடன் மருத்துவமனை வளாகம் என்பது காட்சி அளிக்கும். இதனிடையே, உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் காவலர் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது.
மூதாட்டி, இளைஞர் தாக்கப்படும் காணொளி
இதையும் படிங்க: #Breaking: தாய்-தந்தை, மகன் என 3 பேர் மர்ம மரணம்; மீட்கப்பட்ட சடலம்.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.!
காவலர் ஒருவர் மூதாட்டி மற்றும் இளைஞர் ஒருவரை, ஆவேசமாக அடித்து அறை ஒன்றில் இருந்து வெளியே தள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எதனால் காவலர் இவ்வாறான கோபத்துடன் நடந்துகொண்டார் என தெரியவில்லை. வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
மூதாட்டியை ஆவேசமாக தள்ளவிடும் காவலர்
இளைஞரை விட காவலர் மூதாட்டியை ஈவு இரக்கமின்றி ஆவேசமாக கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: விஏஓ-க்கே இந்த நிலைமையா? பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவியாளரின் அதிர்ச்சி செயல்.. சாணியடி.!