வந்தே பாரத் இரயிலில் தரமற்ற உணவுகள் விநியோகம்; நடிகர் பார்த்தீபன் குற்றச்சாட்டு.!



Actor Parthiban Complaint on Poor Food in Vande Bharat Train 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் அறியப்படுபவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். இவர் சமீபத்தில் (அக்.13) வந்தே பாரத் இரயிலில் பயணம் செய்திருந்தார். அப்போது தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தரமற்ற உணவு குறித்து புகார்

இதனால் வேதனையடைந்தவர், இரயிலில் உணவு சேவையினை வழங்கி வரும் மேலாளரை அழைத்து, புகாரை பதிவு செய்து வந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார். மேலும், தான் அவ்வப்போது இரயிலில் பயணம் செய்வேன் எனினும், அடுத்தடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு எனது புகார் உதவும் என கூறி இருந்தார். 

இதையும் படிங்க: Bigg Boss Tamil: முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ரவீந்தர்; முதல் எலிமினேஷன் இதோ.!

எடுப்பதாக

நடவடிக்கை உறுதி:இதனிடையே, சேலம் இரயில்வே கோட்டம் சார்பில், தரமான உணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தரமற்ற உணவுகள் குறித்த விஷயத்தில் பலரும் தனக்கென அங்கிருப்போரை கடிந்துகொண்டு பயணித்த நிலையில், பார்த்தீபனின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ லீக்? நெட்டிசன்கள் பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!