மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!



Andhra Pradesh Tirupati 4 Died in Accident 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, பாக்ராபெட் மலைப்பாதை பகுதியில் கார் - லாரி பயணம் செய்துஒண்டு இருந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி, தக்காளி ஏற்றி லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. 

இந்த வாகனம் திருப்பதி மலைப்பாதையில் வந்துகொண்டு இருந்தபோது, திடீரென நிலைசாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரி இருசக்கர வாகனம், கார் மீது விழுந்தது. 

இதையும் படிங்க: நிலச்சரிவில் சரிந்த குடும்பம்; வருங்கால கணவரையும் விபத்தில் இழந்த பெண்.! நீங்காத வடுவாக வயநாடு துயரம்.!!

4 பேர் பரிதாப பலி

இந்த சம்பவத்தில் கார் நொறுங்கிப்போன நிலையில், காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வயலுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் லாரி; விபரீதம் புரியாமல் பெட்ரோலை பிடிக்க முண்டியடித்த மக்கள்.!