16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் பலாத்காரம்; 5வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொடுமை.!



Delhi Dwarka 16 Aged Girl Rape in Gun Point 

டெல்லியில் உள்ள தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள துவாரகாவில், 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியே இருந்துள்ளார். அச்சமயம் வீட்டில் வந்த மர்ம நபர், சிறுமியின் முன் துப்பாக்கியை எடுத்து காண்பித்து மிரட்டி இருக்கிறார்.

சிறுமி பலாத்காரம்

துப்பாக்கி முனையில் சிறுமியை வேறொரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்துசென்றவர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியை 5 வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி கால்களில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!

அதிகாரிகள் விசாரணை

தொடர்ந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமான வகையில் இருப்பதால், மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுமி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியையை விரட்டி விரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி; தலைமை ஆசிரியரின் வெட்கக்கேடான செயல்.!