கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!



in Uttar Pradesh Meerut Girl Sexual Abused in Sugarcane Field 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம், பாகுஸுமா பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர், கரும்புத் தோட்டத்தில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனை வீடியோ எடுத்து வைத்த இளைஞர்கள் கும்பல், அதனை காண்பித்து சிறுமியை மிரட்டி இருக்கிறது. 

மேலும், தாங்கள் அழைக்கும்போதெல்லாம் நீ படுக்கையை பகிர வர வேண்டும் என மிரட்டிய கும்பல், அவரை அங்கிருந்து அனுப்பி இருக்கிறது. இதனிடையே, சிறுமி கயவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் உள்ளூர் வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

சிறுமியின் பெற்றோர் புகார்

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், கடந்த 14 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அங்கித், ஆகாஷ், குன்னு குமார் ஆகியோர் சிறுமியை பலவந்தமாக சீரழித்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியையை விரட்டி விரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி; தலைமை ஆசிரியரின் வெட்கக்கேடான செயல்.!

கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமியிடம் அத்துமீறிய கும்பல், அங்கிருந்து தப்பிச்சென்றாலும் மிரட்டலால் பயந்துபோன சிறுமி அதனை யாரிடமும் கூறவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 22 வயது கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த கொடூரம்.. வீடியோ எடுத்த நண்பன்.. அதிரவைக்கும் சம்பவம்.!