கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்: கணவன் கண்முன் மனைவி பரிதாப பலி.!



Gujarat Vadodara Car Hits Couple Died 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில், கணவன் - மனைவியாக தம்பதிகள்  சாலையோரம் நடந்து வந்துகொண்டு இருந்தனர். அச்சமயம், அவ்வழியே கார் ஒன்று வந்துள்ளது. 

அதிவேகத்தில் வந்த ஸ்கர்ப்பியோ கார், தம்பதிகளின் மீது நேரடியாக கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு மோதியது. பின் அந்த கார் சுவர் ஒன்றில் இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்து; 6 பேர் பலி., 6 பேர் படுகாயம்.!

மனைவிக்கு நடந்த சோகம்

கணவரின் கண்முன் மனைவிக்கு உயிர் பறிபோக, படுகாயமடைந்த கணவர் கதறி அழுதுள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: பாஜக வேட்பாளரின் கார் மோதி 2 சிறார்கள் பலி., உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்.!