பசுவை கடத்தும் கும்பல் என நினைத்து பயங்கரம்; 19 வயது பள்ளி மாணவர் கொலை.!



Haryana Faridabad 12 Class Student Dies 

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் , காத்புரி பகுதியை சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா (19). இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். 

கடந்த 23ம் தேதி மிஸ்ரா தனது நண்பர்களுடன் காரில் உணவகத்திற்கு சென்றுள்ளார். அச்சமயம், இவர்களை பசுவை கடத்த வந்த கும்பல் என நினைத்த சிலர், ஆரியனின் காரை துரத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: "மன்னிச்சிடு மா.. உன்ன கொன்னுட்டேன்., ஓம் சாந்தி" - தாயை கொன்று இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்த மகன்..!

என்ன காரணம் என தெரியாமல் பதறிப்போன ஆரியன் காரை இயக்கிச்சென்ற நிலையில், ஒருகட்டத்தில் அவரின் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஆர்யன் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், காவல் துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சௌரப் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் மச்சான் கொடூர கொலை; பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பகீர் சம்பவம்.!