சிறுநீர் கலந்து சப்பாத்தி: முதலாளி குடும்பத்தை பழிவாங்க பணிப்பெண் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன குடும்பம்.!



in-uttar-pradesh-ghaziabad-32-year-old-maid-girl-cookin

 

தன்னை ஆத்திரப்படுத்திய முதலாளி குடும்பத்தை பழிவாங்க, பணிப்பெண் சிறுநீர் கழித்து உணவு தயாரித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர், தங்களின் வீட்டில் 32 வயதுடைய  ரீனா என்ற பெண்ணை சமையல் செய்ய பணிப்பெண்ணாக நியமனம் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!

இதனிடையே, சமீபத்தில் வேலையை சரிவர செய்யாத ரீனாவை குடும்பத்தினர் கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ரீனா, அவர்களை பழிவாங்க எண்ணி இருக்கிறார். 

urine

சப்பாத்தியில் சிறுநீர் கலந்து தயாரிப்பு

இதனையடுத்து, குடும்பத்தினர் சப்பாத்தி சமைத்து கேட்டபோது, அவர் சிறுநீர் கழித்து, அதனை பயன்படுத்தி சப்பாத்தியை தயாரித்து சாப்பிட வழங்கி இருக்கிறார். 

இந்த விஷயம் குறித்த சம்பவத்தை குடும்பத்தினர் சிசிடிவி கேமிராவில் கண்டுகொண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் ரீனாவை கைது செய்தனர். 

தற்போது ரீனாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செயல் பலரையும் பதறவைத்துள்ளது. 


 

இதையும் படிங்க: கடவுள் இருக்கான் குமாரு.. இடித்து விழுந்த 160 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. நொடியில் உயிர் தப்பிய சிறார்கள்.!