கள்ளக்காதல் அம்பலமானதால் பயங்கரம்; பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர் கூட்டம்.! 



mehalaya Dadenggre Woman Beaten by Gang 

 

மேகாலயா மாநிலம், மேற்கு ஹரோ மலைப்பகுதி, தாரெங் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருந்தனர். சமீபத்தில் அவரின் கணவர் உயிரிழந்ததால், பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனிடையே, பெண்மணி வேறொரு இளைஞருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரியவருகிறது. 

பெண்ணின் மீது சரமாரி தாக்குதல்

இதனை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் கண்டறிந்துவிடவே, பெண்ணை பொதுவெளியில் வைத்து அனைவரும் பலமாக தாக்கி இருக்கின்றனர். கையில் கிடைத்த பொருட்கள், மரக்கட்டை என பெண்ணை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பலரும் வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தனர். 

இதையும் படிங்க: விவாகரத்துக்கு பின் பள்ளி நண்பருடன் திடீர் காதல்; கருத்து வேறுபாடால் கத்தியால் பதில்சொன்ன பயங்கரம்.!

யாருமே பெண்ணை காப்பாற்றவோ அல்லது தாக்குவோரை தடுக்கவோ முன்வரவில்லை. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: பெண் காவலருக்கே நடுரோட்டில் இப்படியா?.. கான்ஸ்டபிளால் நடந்த பரபரப்பு சம்பவம்..! வேடிக்கை பார்த்த மக்கள்.!