தம்பதிகளாக சேர்ந்து திருட்டுத் தொழில்; நாமக்கல்லை கலங்கவைத்த கும்பல் கைது.!



Namakkal Robbery case Police Arrest Couple 

 

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, கடந்த மே 26ம் தேதி பொன்விழா நகரில் உள்ள எதிரெதிர் வீடு நகை பணம், கொள்ளை போனது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வாகன தணிகையிலும் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து.. தள்ளிக்கொண்டு போன பயணிகள்.! அவல நிலை.!

மூவர் கும்பல் அதிரடி கைது

இந்நிலையில், இருசக்கர வாகனத்தின் டிரிபிள்ஸ் வந்த கும்பல், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இதனை கவனித்த அதிகாரிகள் மூவரில் கௌதமன் என்ற நபரை கைது செய்தனர். 

அவர் பொன்விழா நகரில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து தெரிவிக்க, அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் தம்பதிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் தம்பதிகளாக சேர்ந்து திருட்டு செயலில் ஈடுபட்டது அம்பலமானது. 

இவர்களிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வழுக்கி விழுந்தவர்களை தூக்க சென்ற போலீசார்; கல்லால் அடித்த போதை ஆசாமிகள்.! குடிபோதையில் அட்டகாசம்.!!