3 வயது சிறுமியை கூட விட்டு வைக்காத முதியவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!



Old man harassment to 3 years old girl

திருவண்ணாமலை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முடிவுரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.

thiruvannamalai

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

thiruvannamalai

இதுகுறித்து சிறுமி தாது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் முருகேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.