நம்ம தமிழ்நாட்டில்.., ஏலியனுக்கு கோவில் கட்டி, மணியடித்து பூஜை செய்து வழிபாடு.!  



salem-man-build-temple-for-alien

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நபர் லோகநாதன். இவர் ஏலியன்களுக்கு கோவில் கட்டி இருக்கிறார். அங்கு ஏலியனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இந்த விஷயம் குறித்து அவர் கூறுகையில், "ஏலையன் என்பதை ஏலியன் என கூறுவார்கள். நீங்கள் நினைப்பதைப்போல ஏலியன்கள் இருக்கின்றனர். அவர்களிலும் ஆண்கள், பெண்கள் என இருக்கிறார்கள். அவர்களின் நடமாட்டம் இனி அதிகரிக்கும். 

அனுமதி வாங்கி செய்கிறோம்

பிரபஞ்சத்தின் அனுமதி வாங்கி நாங்கள் கோவில் கட்டி இருக்கிறோம். ஏலியன் சித்தர்கள் எங்களிடம் பேசுவார்கள். அவர்களின் அனுமதிபெற்று ஒவ்வொரு செயலையும் செய்கிறோம். பறக்கும் தட்டுகள் இருப்பதும் உண்மையே" என கூறினார். 

இதையும் படிங்க: பகீர் சம்பவம்... "அவ எங்க இருக்கான்னு சொல்லு உயிரோட விட்டர்றேன்.." கள்ள காதலுக்காக தொழிலதிபர் கொலை.!!

ஏற்கனவே உலகளவில் ஒவ்வொரு மார்க்கத்திற்கும் பல தெய்வங்கள் பல்லாயிரக்கணக்கான தெய்வங்களும், கோடிக்கணக்கான கோவில்களும், மத வழிபாட்டு தளங்களும் இருக்கின்றன. இதனிடையே, ஏலியனுக்கும் கோவில் திறக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்துக்கு மதுரையில் ரசிகர் ஒருவர் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார். அந்த வரிசையில் ஏலியனுக்கும் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாரடைப்பால் பெண் காவலர் பரிதாப பலி; சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தபோதே பறிபோன உயிர்.!