"விடிய விடிய செல்போன் பேச்சு.." ஆத்திரத்தில் 3-வது கணவர் செய்த விபரீதம்.!!



woman-was-murder-by-her-third-husband-due-to-the-doubt

சேலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இளம் பெண்ணின் மூன்றாவது கணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

3-வது திருமணம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர், காவேரி புரத்தைச் சேர்ந்தவர் கவிதா. 31 வயதான இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டுள்ளது. கவிதாவிற்கு 12 வயது மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவிற்கும் பாலவாடியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் இடையே கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தம்பதிகள் இருவரும் கொளத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

tamilnadu

குடும்பத் தகராறு

கவிதா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். இது தொடர்பாக கவிதா மற்றும் அவரது கணவர் அருணாச்சலம் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்களிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கவிதா கோவையில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை கோவை சென்ற அருணாச்சலம் சமாதானம் பேசி தனது மனைவியை ஊருக்கு அழைத்து வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: திருமண வீட்டில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை; இளைஞர் போக்ஸோவில் கைது.. விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!

கொடூரமாக வெட்டி படுகொலை

இந்நிலையில் கணவருடன் ஊருக்கு திரும்பிய கவிதா இரவு முழுவதும் வேறொரு நபருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் அருணாச்சலம் தனது மனைவியை கொடூரமாக  அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மானாமதுரை: ஆண் நண்பருடன் இருந்த பெண் ஐவர் கும்பலால் கற்பழிப்பு; 2 காமுகன்களுக்கு மாவுக்கட்டு.!