#Breaking: நிலநடுக்கத்தால் பயங்கர நிலச்சரிவு; பப்புவா நியூ கினியாவில் மண்ணில் புதைந்து 100 பேர் பலி.!



Papua New Guinea Landslide 100 Dead 

 

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.3 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியில் இயற்கையாக அமைந்த அந்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு பின் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: கடமான் முட்டி 70 வயது முதியவர் பலி; குட்டியுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சோகம்.!

பப்புவா நியூ கினியாவின் தலைநகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ரிமோட் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோவால் நெற்றிப்பொட்டில் குண்டு துளைத்து 17 வயது பாடகர் பலி.!