7 வயது சிறுமி இப்படியா மரணிக்கும்? கேட் சரிந்து விழுந்து சோகம்.. தந்தை கண்முன் மகள் பலி.!
7 வயது சிறுமி இப்படியா மரணிக்கும்? கேட் சரிந்து விழுந்து சோகம்.. தந்தை கண்முன் மகள் பலி.!

சென்னை நங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர் சம்பத். இவருக்கு 7 வயதுடைய ஐஸ்வர்யா என்ற மகள் இருக்கிறார்.
சிறுமி தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயில்கிறார். நேற்று மாலை சுமார் 5 மணியளவில், சிறுமி தந்தையின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்தார்.
இதையும் படிங்க: #Breaking: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடைநீக்கம்.!
வீட்டிற்குள் இருசக்கர வாகனத்தை கொண்டு சென்றதும், சிறுமி இரும்பு கிரில் கேட்டை சாற்றினார். அப்போது, கிரில் கேட் திடீரென சரிந்து அவரின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இரைத்து.
இதையும் படிங்க: காதல் ஜோடிக்கு இப்படியா மரணம் ஏற்படனும்? இரயில் மோதி நடந்த சோகம்.!