11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்பூசணியை பறித்ததால் விவசாயி பகீர் செயல்.! போக்ஸோவில் கைது.!
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்பூசணியை பறித்ததால் விவசாயி பகீர் செயல்.! போக்ஸோவில் கைது.!
தோட்டத்தில் விளைந்து இருந்த தர்பூசணியை பறித்த 11 வயது சிறுமிக்கு, விவசாயி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் 11 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, பள்ளிக்குச் செல்லும் வழியில் தர்பூசணியை பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: மூதாட்டியை ஆவேசமாக தள்ளிவிட்ட காவலர்.. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!
அப்போது, தோட்டத்தில் இருந்த தர்பூசணியை அவர் பறித்ததாக கூறப்படுகிறது. அங்கு விவசாயம் செய்து வந்த பெலிக்ஸ் என்ற 37 வயது நபர், சிறுமியை கவனித்து இருக்கிறார்.
போக்ஸோயில் கைது
தோட்டத்தில் தர்பூசணி பறித்த சிறுமியை, பெலிக்ஸ் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, வீட்டுக்கு சென்று தாயிடம் நடந்ததை கூறி இருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பெலிக்ஸை கைது செய்தனர்.
இதையும் படிங்க: #Breaking: தாய்-தந்தை, மகன் என 3 பேர் மர்ம மரணம்; மீட்கப்பட்ட சடலம்.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு.!