×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற இடத்தில் வட்டி கேட்டு தகராறு; ரௌடி கொலை.!

சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற இடத்தில் வட்டி கேட்டு தகராறு; ரௌடி கொலை.!

Advertisement


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலந்தாங்கல், பெரிய ஏரி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வேட்டவலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டவர் ஐயப்பன் (வயது 42) என்பது தெரியவந்தது.

ரௌடி கொலை

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். இவரின் மீது 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுச்சேரியில் நிலுவையில் இருக்கின்றன. 

இதையும் படிங்க: சிகிரெட்டுக்கு பற்றவைத்த தீ இளைஞரின் உயிர்பறித்த சோகம்.. போதையிலேயே மூச்சுத்திணறி பிரிந்த உயிர்.!

சம்பவத்தன்று நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு இருந்தவர், வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது உடனான தகராறில் ஐயப்பனை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகளை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை: அரசு கொடுத்த நிலத்துக்கு உரிமை கோரி தகராறு; லாரி ஏற்றி இளைஞர் படுகொலை..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tiruvannamalai #rowdy #tamilnadu #Murder #திருவண்ணமாமலை #ரௌடி கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story