சோகத்தின் உச்சம்... நூடுல்ஸ் ஆல் பறிபோன உயிர்.!! 8 வயது சிறுமி பரிதாப பலி.!!



8-year-old-student-died-while-eating-noodles

கேரள மாநிலத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட 8 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கேரள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாம் வகுப்பு மாணவி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோஜன். இவருக்கு 8 வயதில் ஜோவானா என்ற மகள் இருந்தார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

India

தொண்டையில் சிக்கிய நூடுல்ஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக நூடுல்ஸ் அவரது தொண்டையில் சிக்கியிருக்கிறது. இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் கொடூரம்... கன்று குட்டிக்கு பாலியல் வன்புணர்வு.!! இளைஞரை கைது செய்த காவல்துறை.!!

மருத்துவமனையில் பிரிந்த உயிர்

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி ஜோவானா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த மரண சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளி; அவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு.!