புக்கிங்கை கேன்சல் செய்ததால் ஆத்திரம்; பெண்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்.. பட்டப்பகலில் அதிர்ச்சி.!



in Bangalore 2 women Attacked by Auto Driver for Cancel Ride 

ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. பல வழிகளில் பெண்கள் ஏமாற்றப்படும் செயல்களை தொடர்ந்து, பலாத்காரம் போன்ற குற்றங்களும் நிகழுகின்றன. சில நேரங்களில் பெண்கள் தாக்கப்படுகின்றனர். 

இதனிடையே, இந்தியாவின் மென்பொருள் நகரமாக அடையாளப்படுத்தப்படும் பெங்களூரில், பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்த 2 பெண்கள், தங்களின் பயணத்திற்கு ஆட்டோ ஒன்றை புக்கிங் செய்துள்ளனர்.

இறுதி நேரத்தில் அவர்கள் சில காரணத்தால் புக்கிங்கை கேன்சல் செய்து, வேறொரு ஆட்டோவில் ஏறி பயணித்து இருக்கின்றனர். அவர்களை தேடி கண்டறிந்த ஆட்டோ ஓட்டுநர், எதற்காக புக்கிங்கை கேன்சல் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி, பெண்ணை ஒருகட்டத்தில் தாக்கியுள்ளார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: புதுத்துணி கேட்டது குத்தமா?.. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்.!

இதையும் படிங்க: தலித் இளம்பெண் பலாத்காரம்; கிராமத்தையே சூறையாடிய மக்கள்; பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!