தலித் இளம்பெண் பலாத்காரம்; கிராமத்தையே சூறையாடிய மக்கள்; பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!



in Telangana Asifabad district Violence 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆசிபாபாத், ஜைனுர் கிராமத்தை சேர்ந்த தலித் பெண்மணி ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் வேறு மதத்தவர் என கூறப்படுகிறது. இந்த தகவல் ஊர் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதனிடையே, ஆத்திரமடைந்த பொதுமக்கள் 2000 பேர் சேர்ந்து, அந்த ஊரில் இருக்கும் மசூதிக்கு சென்று அதனை அடித்து நொறுக்கினர். மேலும், அம்மதத்தினர் சொந்தமாக வைத்திருந்த கடைகளுக்கு சென்று அதனையும் சூறையாடினர். 

இதையும் படிங்க: நடுரோட்டில் நாயின் மீது ஆட்டோவை ஏற்றிய ஓட்டுநர்; நொடிப்பொழுதில் இன்ஸ்டன்ட் கர்மா.. துள்ளத்துடிக்க அதே இடத்தில் சாவு.!

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும், கூடுதல் காவல்துறையினரும் பாதுகாப்பு கருதி வரவழைக்கப்ட்டனர். இந்த விஷயம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட 2000 பேர் கொண்ட கும்பல் ஜைனூர் கிராமத்திற்குள் நுழைந்து, ஒரு மசூதியை குறிவைத்து, அப்பகுதியில் உள்ள எனது முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் சொத்துக்களை குறிவைத்ததாக கூறப்படுகிறது. ஷேக் மக்தூம் என்ற ஆட்டோரிக்ஷா ஓட்டுநரால் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: பள்ளி கழிவறையில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை; போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி.!