இளைஞரின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல நடுரோட்டில் அறுத்த இளைஞர்; பதறவைக்கும் சம்பவம்.!



in Uttar Pradesh Teenager Murder Attempt by Youth 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி, பஃகந்தி நாத் கோவில் சாலையில் ரிங்கு என்ற இளைஞர் தினமும் மோமோஸ் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வேறொரு தெருவில் வசித்து வரும் இளைஞர் மும்மது ஷபீக். சிறுவன் முகமது சபீக் அவ்வப்போது மோமோஸ் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று ரிங்கு விற்பனை செய்யும் மோமோஸ் கடைக்கு சென்று சாப்பிட்டவர், பின் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் ரிங்கு - உணவு சாப்பிட்டு முடித்த முகமது ஷபீக் இடையே வாய்த்தகராறு எழுந்துள்ளது. இந்த தகராறு சில நொடிகளில் கைகலப்பாக மாறி இருக்கிறது. 

இதையும் படிங்க: சாலையில் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல்.. நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

நடுரோட்டில் பதறவைக்கும் சம்பவம்

அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ரிங்கு, முகமதுவை கீழே தள்ளி தன்னிடம் இருந்த கத்தியால் சிறுவனின் கழுத்தை நடுரோட்டில் துள்ளத்துடிக்க அறுத்தார். இதனால் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு முகமது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரதாரி காவல் துறையினர், ரிங்குவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. 


 

இதையும் படிங்க: திருமணத்திற்கு காதலி வற்புறுத்தியதால் சோகம்; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!