திருமணத்திற்கு காதலி வற்புறுத்தியதால் சோகம்; இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..! 



Uttar Pradesh Etawah Youth Suicide After Girlfriend Family Pressure to Marriage 

 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டவாஹ் மாவட்டம், நக்லா பகந்தூர் வசித்து வருபவர் ரஜத் குப்தா. இவருக்கு அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் உடனடியாக தங்களின் மகளை திருமணம் செய்யுமாறு ரஜத்தை வற்புறுத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: உறவினர் பெண்ணுடன் ஓட்டம்; காவல்துறை விசாரணைக்கு பயந்து அண்ணன்-தம்பி தூக்கிட்டு தற்கொலை?.!

வீடியோ வெளியிட்டு சோகம்

இதனால் மனமுடைந்துபோன ரஜத், தனது காதலியின் பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்துவதால் உயிரை மாய்த்துக்கொள்வதாக வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபை காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க: ஸ்னாப்சாட் டவுன்லோட் செய்ய தந்தை எதிர்ப்பு; தூக்கில் பிணமாக தொங்கிய 16 வயது சிறுமி.!