"ஐயோ கடிச்சிட்டானே..." கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை கடித்து குதறிய கணவன்.!! உபியில் வினோத சம்பவம்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் தனிமையிலிருந்த பக்கத்து வீட்டு நபரின் மர்ம உறுப்பை அந்தப் பெண்ணின் கணவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக புகாரளித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
வெளியூருக்கு செல்ல திட்டமிட்ட கணவன்
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த நபருக்கு திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறி சென்றிருக்கிறார் அந்த நபர். இந்நிலையில் அவரது வேலை விஷயம் தொடர்பான பயணம் ரத்தானதால் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
அண்டை வீட்டு நபருடன் மனைவி
அந்த நபர் வீடு திரும்பிய போது அவரது மனைவி பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபருடன் தனிமையில் இருந்திருக்கிறார். இதனைக் கண்ட கணவனுக்கு ஆத்திரம் ஏற்படவே பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த நபர் தனது மனைவியின் கள்ளக்காதலனின் மர்ம உறுப்பை கடித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பரபரப்பு... 5 வயது சிறுமி கடத்தி கொலை.!! கொலையாளி என்கவுன்டர்.!
காவல்துறை நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து அந்த நபர் வலியால் அலறி துடிக்கவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. கள்ளக்காதலனின் மர்ம உறுப்பு கடிக்கப்பட்ட சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் கொடூரம்... 15 வயது சிறுமி கூட்டு பல்லாதகாராம்.!! 3 சிறுவர்கள் வெறி செயல்.!!